Wednesday, December 30, 2009

மூன்று கவிதைகள்

   ஒன்று  


ஏதோ இருக்கிறதென்றுதான்
போய் கொண்டிருக்கிறோம்
மின்னல் வெட்டின் ஷணமேனும்
அது புரிபடலாமென்று


நாம் கடந்த பாதையை
அடையாளம் காட்டும்
உறித்து விழுந்த
வெங்காய அடுக்குகள்.



 இரண்டு


பிரதிபலிப்பு



மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை
அகல் விளக்கின் மெல்லிய
தீஞ்சுடர்
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.



  மூன்று   


பின்புறத்தில் ஒரு
கற்பகவிருட்சம்
அதன் நிழல்திட்டில்
ஒரு காமதேனு
பால் கறக்க
அமுதசுரபி
இவையன்றி
பிரிதொன்றும் வேண்டாம்
பராபரமே


.

2 comments:

  1. இவைகள் எனக்கு உன்னை
    ஞாபகப்படுத்துவது போல
    நீ எனக்கு இவைகளை.


    ரொம்ப நல்லா இருக்குங்க...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete